இன்று (12.10.2012) மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபை அல் மனார் மையத்தில் இஸ்லாமிய பயான் இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சகோதரர் ஃபுஆத் கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியினை சகோதரர் ஜஅஃபர் தொகுத்து வழங்கினார்.
இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முபாரக் மதனி, சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழி எது என்ற தலைப்பில் மிக அருமையான உரை ஒன்றை ஆற்றினார்.
உரையில் அவர் எடுத்து வைத்த குர்ஆனிய வசனங்கள், ஹதீஸ்களின் விளக்கம் பார்வையாளர்களின் கண்களை கசிய வைத்தது.
இறுதியாக சகோதரர் கீழக்கரை நஜிமுத்தீன் நன்றியுரை கூற, நிகழ்ச்சி நிறைவுற்றது.
சகோதரர் ரஃபி அஹ்மது தலைமையிலான குழு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தது.
அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தகவல் : கீழை ஜமீல் முஹம்மது.
Friday, October 12, 2012
Posted by
கீழை ஜமீல் முஹம்மது
at
11:16:00 pm
0
விமர்சனங்கள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Posts (Atom)