Tuesday, October 09, 2012

குர்பான்கள் வரவேற்கப்படுகின்றன........

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பான கீழக்கரை வாழ் சகோதரர்களே!

கடந்த 12 வருடமாக நம் ஊரிலுள்ள ஏழை மக்களுக்கும் நம் ஊரை சுற்றி உள்ள ஊர் மக்களுக்கும் ஹஜ் பெருநாள் அன்று மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட கூட்டு குர்பானியை நம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) வழங்கி வருகிறது.

அவ்வாறே, இந்த வருடமும் நம் அறக்கட்டளை சார்பாக குர்பான் கறி வழங்க இருப்பதால் உங்களது குர்பானை கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை தந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஆடு ஒன்றுக்கு – ரூ.6,000/-

மாடு ஒரு பங்குக்கு – ரூ.1,500/-

தொடர்புக்கு......

கீழக்கரை : 04567-245832

சென்னை : 9080424243 / 9840120106

துபை : 050-4985037

இவண்

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை
கீழக்கரை.

உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க.....

உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இன்றைக்கு சம்பாதிக்கும் காசு பணங்கள் மருத்துவத்திற்கே போதவில்லை. தலைவலி என மருத்துவமனைக்கு சென்றால், இரத்தப் பரிசோதனை (Blood Test) ஸ்கேன் என குறைந்த பட்சம் 1000 ரூபாய் செலவாகாமல் உங்கள் தலைவலி போகாது. தலைவலிக்கே 1000 என்றால், நீரிழிவு, காச நோய், இரத்த அழுத்தம், புற்று நோய் என வந்தால்....??!!

தலை சுத்துகிறது.........அந்த அளவிற்கு இன்றை நவீன மருத்துவம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது.

ஒரே செல்லால் உருவான உடம்பை பல கூறுகளாக பிரித்து, அதற்கு தனி தனி நோய்களால் பிரித்து அதற்கு சிகிச்சை என்ற பெயரில் நம்மை  நவீன மருத்துவத்தில் அடிமைப்படுத்தி உள்ளனர். ஆகவே. இன்று எதற்கு எடுத்தாலும், மருந்து, மாத்திரை என்ற உலகமாகி விட்டது. மருத்துவராக படித்து விட்டு வெளி வரும் ஒருவர் கோடான கோடியினை சம்பாதிக்கலாம். மருத்துவர் ஒருவர் தன் சொந்த ஊரில் கேவலம் மாதம் 50,000 ரூபாய் தராளமாக சம்பாதித்து விட முடியும். அந்த அளவிற்கு நோய் பயத்தை மக்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலையில் பார்க்கும் சகோதரர்களுக்கு இனிப்போ, பலகாரமோ அவர்கள் குடும்பத்தினர் அனுப்புவதில்லை. நீரழிவு மாத்திரை, பிரஸ்ஸர் மாத்திரை, சுகர் ஃப்ரீ டேப்லட் என்றுதான் அனுப்பி வைக்கின்றனர்.

இன்று கடனே இல்லாத 1000 சதவீதம் இலாபம் தரும் ஒரே தொழில் மருத்துவமனைகள்தான் என்றால் அது மிகையல்ல.

இன்று ஏதாவது நோய் வந்து விட்டால், நாம் மிகவும் கவலைப்படுகின்றோம். நோயினை கண்டு கவலையோ, அச்சமோ கொள்ள வேண்டாம். தையரியத்துடன் இருப்போமானல், நோயின் வீரியம் பாதிக்கு மேல் குறைந்து விடும். மீதியினை கீழ்காணும் முறையில் பின்பற்றினால் இறையருளால் முற்றிலும் சுகமாகும்.

நம்மை படைத்த ஏக இறைவன் (வல்ல ரஹ்மான்), நமக்கு வந்த நோயினையும் போக்க ஆற்றலுடையவன். கண்ணியமிக்க நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் பொழுது அவர்கள் "குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக்" இந்த இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள்.  ஓத முடிந்தால் ஓதிவிடுவார்கள் ஓத முடியாத அளவுக்கு நோய் இருக்கும் பொழுது நான் ஓதுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் சொல்கிறார்கள். நான் ஓதி அவர்கள் கையில் ஊதி அவர்களுடைய கையை கொண்டே உடம்பில் தடவி விடுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

மேலும் அல்ஹம்து சூராவின் மூலம் ஸஹாபி அபூ ஸைது அல் குத்ரி (ரழி) அவர்கள் தேள் கடியின் விஷத்தினை இறங்கியதை ஆதாரப்பூர்வமான ஹதீஸின் வாயிலாக பார்க்கின்றோம்.

இதில் நாம் என்ன விளங்குகிறோம் என்றால் அல்ஹம்து சூரா, குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக் இந்த மாதிரியான சில சூராக்களை நோய் வரும்பொழுது ஓதினோம் என்றால் அல்லாஹ் நிவாரணம் தருவான்.

அத்துடன் விட்டு விடாமல் கீழ்காணும் முறைகளை பயன்படுத்தினால் நல்ல பலனை இறைவன் வழங்குவான்.

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!