Saturday, February 04, 2012

கீழக்கரை நகராட்சிக்கு தனி ஆணையர் நியமிக்க சட்டமன்றத்தில் ஜவாஹிருல்லாஹ் M.L.A. கோரிக்கை!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேற்று (03.02.12) அன்று ஆற்றிய உரையின்பொழுது தனது தொகுதிக்கு உட்பட்ட 3 நகராட்சிக்கும் தனி தனி நகராட்சி ஆணையர்களை நியமிக்க கேட்டுக் கொண்டார்.
தொகுதிப்பிரச்சனைகள்:
1.எனது இராமநாதபுரம் தொகுதியில் 3 நகராட்சிகள் உள்ளன. ஆனால் 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் இருப்பதில்லை, தற்போது இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் கூடுதலாக கீழக்கரை நகராட்சியை கவனித்து வருகிறார். இராமேஸ்வரம் நகராட்சியில் நகராட்சிப் பொறியாளர் கூடுதலாக ஆணையாளர் பொறுப்பை கவனிக்கிறார் எனவே 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் நியமனம் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!