Monday, December 12, 2011

துபையில் கிழக்குத் தெரு ஜகாத் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம்!

கீழக்கரையில் மார்க்க பணிகள் மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை செய்து வரும் கிழக்குத்தெரு ஜகாத் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (11.12.2011) அன்று துபையில் செயலாளர் ஷிஹாபு அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.






அமைப்பின் தலைவர் அன்ஸாரி அவர்கள் சென்ற நிகழ்ச்சிகளின் நடவடிக்கைகளை விவரித்தார். அறக்கட்டளையின் பணிகளை வீரியப்படுத்தவும், வரும் 2012 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஸாஹிபு, பொருளாளர் அபூபக்கர் மற்றும் இதர நிர்வாகிகள் ரஃபி அஹ்மது, கீழை ஜமீல் முஹம்மது, ஃபாரூக், மக்பூல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். அவர்களின் சிறப்பு வாய்ந்த  ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என தலைவர் அன்ஸாரி தெரிவித்தார்.


























படங்கள் மற்றும் செய்தி : அபூஅவ்ன்.

0 விமர்சனங்கள்:

Post a Comment

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!